நான் ஏன் “வாஸ்து” ஆலோசகராகவும் பணி புரிய தேர்வு செய்தேன்? “வாஸ்து” ஒரு புனிதமான துறையா? “வாஸ்து” அவசியமா?

ஒரு உன்னத தொழில் என்றால் என்ன? பொதுவாக, சுகாதாரம், கற்பித்தல் போன்ற துறைகளில் உள்ள தொழில்கள் உன்னதமான தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன. சரி… உன்னதமான தொழிலைப் பற்றிய எனது வரையறை என்னவென்றால், ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தொழிலில் இருக்கும்போது ஒருவருக்கு உன்னதமான எண்ணங்களும் செயல்களும் இருந்தால், அதை ஒரு உன்னதமான தொழில் என்று அழைக்கலாம்.

ஒரு வாஸ்து ஆலோசகர் ஒரு உன்னத தொழிலில் இருக்க எவ்வாறு தகுதி பெறுகிறார்? ஒரு நபர், தனது வாழ்க்கையில் சில கடினமான சவால்களை எதிர்கொள்ளும்போது, அவரால் சொந்தமாக சமாளிக்க இயலாமல் போகும்போது, ஒரு உண்மையான வாஸ்து ஆலோசகர் அவரின் நிலைமையை உணர்ந்து அவருக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் சவாலை எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் உதவ முடியும். ஒரு நல்ல வாஸ்து வீட்டின் தாக்கம் அந்த நபரின் வாழ்க்கையையே மாற்றும். வாஸ்து ஆலோசகரின் தொழில், ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும்போது, அது ஒரு உன்னதமான தொழில் அல்லவா? சரி, என்னைப் பொருத்தவரை, நான் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அதை உன்னதமானதாக மாற்றிவிடுகிறேன்.

வாஸ்து வெறும் குருட்டு நம்பிக்கையா அல்லது விஞ்ஞான அடிப்படை உள்ளதா என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?

சரி… எனக்குத் தெரிந்த “வாஸ்து” என்பது, முந்தைய தரவு மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எளிய விஞ்ஞானமாகும். இது ‘ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து’வின் எளிய அடிப்படை விதிகளை வடிவமைக்க வழிவகுத்தது. வாஸ்து விஞ்ஞானம் புராதனமானது என்றாலும், வாஸ்து துறையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, ஒரு வாஸ்து இணக்கமான வீட்டில் வசிக்கும் ஒருவர் மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதைக் காட்டுகிறது. “ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து” என்ற பெயரிலும் பாணியிலும் உருவாக்கிய டாக்டர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஐயாவிடமிருந்து வாஸ்துவின் நன்மைகள் பற்றி நான் அறிந்தேன். கடந்த தசாப்தத்தில் எங்கள் குடும்பத்தில் சில சவால்களை நாங்கள் எதிர்கொண்டபோது, ​​நவீன விஞ்ஞானம் பெரிதும் உதவாதபோது, ​​அவர் பரிந்துரைத்த மாற்றங்களை நான் தனிப்பட்ட முறையில் முயற்சித்தபோது, இந்த விஞ்ஞானம் ஒரு அற்புதமான ஒன்று என்பதைக் கண்டறிந்தேன். இது பலரும் குருட்டு நம்பிக்கை மற்றும் முட்டாள் தனமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வாஸ்து’ என்பது இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் என்பதை நான் உணர்ந்த நேரம் அது. சரியான அறிவைக் கொண்ட சரியான நபரை எங்களுக்குக் காட்டியதற்காக நான் நமது பிரபஞ்ச இறை சக்திக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால், சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​தவறான வழிகாட்டுதலுடன் நாம் சிக்கிக் கொள்ளாதது மிக முக்கியமானது. ஒருவர் வாஸ்து என்ற கருத்தை நம்பாவிட்டாலும், வாஸ்துவின் எளிமையான விதிகளைப் பின்பற்றி ஒரு நிலத்தை வாங்குவது மற்றும் ஒரு கட்டிடம் கட்டுவதுவதில் தவறேதும் இல்லையே. வாஸ்துவின் விதிகளைப் பயன்படுத்தாததற்கான விலை நிச்சயமாக மிகப்பெரியது. இந்த கால அறிவியலின் மொழியில் வாஸ்துவை விளக்கி ஒரு தனி பதிவை வெளியிடுவதற்கான உன்னத பணியில் உள்ளேன்.

சரியான வாஸ்து ஆலோசகரை எவ்வாறு அடையாளம் காண்பது?

வீட்டில் பூஜை அறை எங்கே இருக்க வேண்டும் என்று அந்த வாஸ்து ஆலோசகரிடம் கேளுங்கள். பலர் இது வடகிழக்கில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அந்த நபரை நிராகரிக்க இது ஒன்றே போதும். காரணம் என்னவென்றால், வடகிழக்கில் விளக்கு ஏற்றக்கூடாது. தென்கிழக்கு (அக்னி) அல்லது இரண்டாவதாக வட மேற்கு (வாயு) பாகத்தில் மட்டுமே தீபம் எரிய வேண்டும். மேலும் வடகிழக்கு பகுதி இலகுவாக இருக்க வேண்டும், எந்த பாரமும் வைக்கக்கூடாது. அடுத்து, கழிப்பறை வைப்பது. அது தென்கிழக்கில் அமைந்திருக்கலாம் என்று அந்த நபர் சொன்னால், அது அந்த நபரை நிராகரிக்க போதுமான மற்றொரு காரணம் ஆகும். உண்மை என்னவென்றால், வீட்டிற்குள் எந்த கழிப்பறையையும் வாஸ்து ஆதரிக்கவில்லை. மேலும் ஒரு வீட்டில் தென்கிழக்கு பாகத்தில் உள்ள எந்த கழிப்பறையும் அந்த வீட்டில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். நமக்கு உள்ள தெரிவுகளில் வடமேற்கு பாகத்தில் அமைக்கப்படும் கழிவறைகள், வாஸ்து கொள்கைகளின் சமரசம் என்றாலும், மற்ற எல்லா பாகங்களைவிட சற்று பொறுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வாஸ்துவை புத்தகங்களிலிருந்து படித்து கற்று கொள்ள முடியுமா? வாஸ்து பற்றிய புத்தகங்களைப் படிப்பதன் மூலம் வாஸ்துவை சரியாக செயல்படுத்த முடியுமா?

மிகவும் கடினம். புத்தகங்களில் உள்ள சட்டங்கள், விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையை நாம் ஏன் நாடுகிறோமெனில், அவரால் நம்மை நடைமுறையில் சரியாக வழிநடத்த முடியும் என்பதால் தான். இதேபோல், புத்தகங்களைப் படித்து கட்டிடங்களை நிர்மாணிப்பதில் வாஸ்துவில் பொருந்தக்கூடிய விதிகளை சரியாக செயல் படுத்துவது மிகவும் கடினம். எனவே, எதிர்காலத்தில் தேவையற்ற நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதைத் தவிர்ப்பதற்காக, கட்டடம் கட்டப்படுவதற்கு அல்லது நிலத்தை வாங்குவதற்கு முன்பே சரியான நபரை வாஸ்து ஆலோசகராகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

Published by $₩åkåå₹¥å

“Doing one’s own business” - A path to “freedom” led through Knowledge and Wisdom

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: